;
Athirady Tamil News

இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த தந்தை! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0

அம்பாறை – மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போதே, படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு விசாரணை
அத்தோடு, இது தொடர்பான மறு விசாரணையை ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்தி வைக்குமாறும் நீதவான உத்தரவிட்டுள்ளார்.

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினமான மார்ச் வியாழக்கிழமை (14) காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.

மேலதிக விசாரணை
அத்தோடு, குறித்த மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் வெளியானது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை காவல் நிலையப் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.