;
Athirady Tamil News

திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவர்கள்: வெளியான காரணம்

0

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழு ஒன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) பிற்பகல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் பின்னர் சுமார் பத்து மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

12 மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் வைத்தியசாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.