;
Athirady Tamil News

நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்… குடும்பத்துடன் உயிர் தப்பிய ஸ்பெயின் பிரதமர்!

0

ஸ்பெயின் நாட்டில் விடப்பட்டுள்ள தொடர் விடுமுறை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸ் விரும்பினார்.

இதன்படி, ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல அவர் முடிவு செய்துள்ளார்.

இதற்காக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இருந்து சிறிய ரக விமானம் மூலம் அவர் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டுள்ளனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பின்னர், அங்கு தயாராக நின்று கொண்டிருந்த மீட்பு படையினர் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இருப்பினும் பிரதமர் தனது குடும்பத்தினருடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.