;
Athirady Tamil News

இரவு ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோது குண்டுவெடிப்பு! 7 பேர் பலி

0

சிரியாவில் இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோது குண்டுவெடித்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோதே காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் வரை காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர், போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.

காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.