;
Athirady Tamil News

வெப்ப காலநிலையால் மூடப்பட்ட நூற்றுக்கணக்கான பாடசாலைகள்

0

பிலிப்பைன்ஸில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைநகர் மணிலாவிலுள்ள டசின் கணக்கான பாடசாலைகள் உட்பட நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் நேரபடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் மணிலாவில் நாளை புதன்கிழமை 43 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று செவ்வாய்க்கழமை 35.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.

அங்கு 1915 மே 17 ஆம் திகதி 38.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியமையே சாதனையாக உள்ளது.

பிலிப்பைன்ஸின் பிரதான தீவான லுஸோன், தென் பகுதி தீவானா மின்டானோவா ஆகியவற்றில் பாடசாலைகளில் நேரடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அல்லது பாடசாலை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.