;
Athirady Tamil News

பிரித்தானியாவில் இருந்து வந்த இளைஞன் பொலிசாரால் கைது

0

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் மாத்தளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை அம்மன் கோவில் பகுதியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதுடைய செல்வராசா மேனகன் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் மைக்கல் நேசக்கரம் அமைப்பின் உறுப்பினர் என்பதுடன், அம் அமைப்பின் ஊடாக முன்னாள் போராளிகள் உட்பட பலருக்கும் பல்வேறு உதவித் திட்டங்களை செய்து வந்துள்ளார்.

கடந்த மாதம் 7 ஆம் திகதி பிரித்தானியாவில் இருந்து இலங்கை வருகை தந்த குறித்த இளைஞன் வெடுக்குநாறி மலை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாத்தனைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த மாத்தளைப் பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.