;
Athirady Tamil News

கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : அதிகரிக்கப்போகும் கொடுப்பனவு

0

கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர்களிடையே நிலவும் பிரச்சினைகள் தொடர்பான விசாரணையின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட கொடுப்பனவுகளின் விபரம்
இதன்படி, கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக கொடுப்பனவு மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவுகள் 01.04.2024 முதல் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளன.

மாதாந்த அலுவலக கொடுப்பனவு மாநகர/நகரசபைக்குள் 3000 ரூபாயாகவும், பிரதேச சபை எல்லைக்குள் மாதாந்த அலுவலக கொடுப்பனவாக 2000 ரூபாயாகவும் திருத்தப்பட்டுள்ளது.

மேலும், வருடாந்த எழுதுபொருள் கொடுப்பனவு 3000 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக
கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேலும் தெரிவித்தார்.

இதற்காக திறைசேரியில் இருந்து மேலதிக ஒதுக்கீடு செய்து, தாமதமின்றி பணம் செலுத்தப்பட வேண்டும். இது தொடர்பான உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கை இலக்கம் 07/2024 அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர் கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட 23.07.2018 திகதியிட்ட உள்நாட்டு அலுவல்கள் சுற்றறிக்கை இலக்கம் 04/2018 மற்றும் 13.08.2019 திகதியிட்ட உள்நாட்டு அலுவல்கள் சுற்றறிக்கை எண் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.