;
Athirady Tamil News

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

0

கொழும்பு – கொள்ளுப்பிட்டி லிபர்டி பிளாஸாவுக்கு அருகில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தீ பரவலில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும் தீ பரவலின் போது எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.