;
Athirady Tamil News

தலைமையற்ற இண்டியா கூட்டணி – அமித் ஷா விமர்சனம்

0

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அரசியல் கட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலத்தின் சத்யசாய் மாவட்டம் தர்மாவரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ஆந்திராவில் தலைதூக்கி வரும் ரவுடிகளின் அராஜகத்தை ஒழிக்கவே பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஊழல் அரசியல் செய்து வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை ஒடுக்கவே நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம்.”எனப் பேசினார்.

மேலும், “திருப்பதி ஏழுமலையான் கோயிலின் புனிதத்தை நாங்கள் காப்பாற்றுவோம்.ஆந்திர மாநிலத்திற்கு ஜீவநாடியாக உள்ள போலவரம் அணை, ஆந்திரா முதலமைச்சராக சந்திரபாபுவும், மத்தியில் பிரதமராக மோடியும் வந்தால், வெறும் 2 ஆண்டுகளில் கட்டப்படும். நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற மோடியை நாம் பிரதமராக்க வேண்டும்.” என மக்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, “இண்டியா கூட்டணியில் பிரதமர்வேட்பாளர் யாரும் இருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு அறிவிப்பதற்கான வேட்பாளர்கள் யாரும் இல்லை என்பது அவர்களுகே தெரியும். பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் துணிச்சல் கூட அவர்களுக்கு இல்லை. சரத்பவார், மமதா பானர்ஜி, ராகுல்காந்தி, ஸ்டாலின் இவர்களில் யாரை இவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க உள்ளனர் என்பதை மக்களுக்கு அவர்கள் நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும்.” என அமித் ஷா விமர்சனம் செய்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.