;
Athirady Tamil News

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு : மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இவ்வாறு இலங்கையின் உத்தியோகபூர்வு கையிருப்பு அதிகரித்துள்ளது.

அதிகரித்துள்ள கையிருப்பு

இதன்படி, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 9.6% அதிகரித்து 5.43 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும், கடந்த 2024 மார்ச் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.96 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.