;
Athirady Tamil News

பாண்டாவாக மாறிய நாய்! பார்வையாளர்களை ஏமாற்றிய பூங்கா நிர்வாகம்

0

சீனாவில் சௌ சௌ இன நாய்களுக்கு கருப்பு வெள்ளை வர்ணம் பூசி பாண்டா கரடியாக மாற்றி பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவமானது சீனாவின் தைசௌ உயிரியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சௌ சௌ இன நாயை பாண்டா என நினைத்து தினமும் ஏராளமானோர் காணக் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாண்டாவாக மாறிய நாய்
இதனையடுத்து பார்வையாளர்களுக்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“எங்கள் பூங்காவில் பாண்டா இல்லாததால் இப்படி செய்தோம் எனவும், நாம் முடிக்கு டை அடிப்பதுபோல்தான் இதுவும். இதனால் நாய்க்கு எந்த பாதிப்பும் இல்லை’ என பூங்கா நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை இதற்கு முன்பு சீனாவில் உள்ள ஹாங்சோ உயிரியல் பூங்காவில் ஏஞ்சலா என்ற பெயர்கொண்ட மலேசிய சூரிய கரடி பார்ப்பதற்கு மனிதனை போல தோற்றமளித்ததால் பார்வையாளர்கள் அதை கரடி வேஷம் போட்ட மனிதன் என்று தவறாக புரிந்து கொண்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.