;
Athirady Tamil News

யாழ் பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் இருவர் விளக்கமறியலில்

0

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற நீதிபதி உத்தரவு
சாவகச்சேரி பொலிஸ் நிலைய முன்னெடுத்த விசாரணையில் சங்கத்தானையை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தொடர்புடையவர் என்ற ரீதியில் பூசகரிடம் இருந்து கொளாளையடிக்கப்பட்ட தங்க நகையினை உருக்கிய முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவருக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.