;
Athirady Tamil News

இலங்கை பொதுத்தேர்தல்: வாக்களார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

0

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (30) ஆரம்பமாகவுள்ளது.

நாளை முதல் அனைத்து பொலிஸ் நிலையங்கள், மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், நவம்பர் 4ம் திகதி இந்த அலுவலகங்களில் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நாட்களுக்குள் வாக்களிக்க முடியாத தபால்மூல வாக்காளர்கள் அவர்கள் பணிபுரியும் மாவட்டச் செயலகத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதேவேளை, இவ்வருட பொதுத் தேர்தலின் போது தபால்மூல வாக்களிப்புச் செயற்பாடுகளை அவதானிப்பதற்காக ஏறக்குறைய 1000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.