;
Athirady Tamil News

புலம்பெர்ந்தோர் நாடு திரும்ப 25,000 யூரோக்கள்! பிரித்தானியா இன்னும் உணர வேண்டும்..புலம்பெயர்தல் அமைச்சர்

0

ஸ்வீடன் புலம்பெயர்ந்தோர் கொள்கையில் திருத்தம் கொண்டுவந்துள்ளதால், அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்ப பணம் வழங்க உள்ளது.

163,000 புகலிடக் கோரிக்கையாளர்கள்
ஐரோப்பிய நாடான ஸ்வீடன் ‘மனிதாபிமான வல்லரசு’ என்ற சுய பாணியில், புலம்பெயர்வோர் மீது திறந்த இதயம் கொண்டு தங்கள் நாட்டிற்கு வரவேற்றது.

மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில், தமது மக்கட்தொகையை விட அதிக எண்ணிக்கையில் அவர்களை ஸ்வீடன் வரவேற்றது.

குறிப்பாக, 2015யில் இடம்பெயர்வு
நெருக்கடியின்போது ஸ்வீடன் கிட்டத்தட்ட 163,000 புகலிடக் கோரிக்கையாளர்களை எடுத்துக் கொண்டது. இது ஐரோப்பாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தனிநபர்களுக்கு அதிகம் ஆகும்.

ஆனால் தற்போது வேறொரு கொள்கையைப் பற்றி பேசுகிறது. அதாவது புலம்பெயர்ந்தோர் வெளியேறுவதற்கு பணம் கொடுப்பதுதான்.

25,000 யூரோக்கள்
புலம்பெயர்ந்தவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்ப 25,000 யூரோக்கள் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் குடியேற்றத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளின் பட்டியலில் இது சமீபத்தியது. சிறிய சலசலப்புடன் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

கட்டுப்பாடற்ற குடியேற்றமானது சட்டப்பூர்வ அல்லது சட்டவிரோதமாக அனுமதிக்கப்படும்போது என்ன நடக்கும் என்பதற்கு ஸ்வீடன் ஒரு படமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்வீடனின் புதிய கோட்பாடு எளிமையானது: “உங்களுக்கு புகலிடம் வழங்கப்படாவிட்டால், நீங்கள் வீடு திரும்ப வேண்டும். நாடுகடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்ட வெளிநாட்டு குற்றவாளிகள், இப்போது வசிப்பிட அட்டைகளை இழந்துள்ளனர் மற்றும் வேலை செய்யும் உரிமைக்கு மறுப்படுகின்றனர்” என்கிறது இந்த கோட்பாடு.

முடியாத காரியம்
புலம்பெயர்தல் அமைச்சர் Johan Forssell இதுகுறித்து கூறுகையில், “உங்களுக்கு ஸ்வீடனைப் பற்றி எதுவும் தெரியாவிட்டால் அல்லது உங்களால் ஸ்வீடிஷ் பேச முடியாவிட்டால் நீங்கள் எப்படி இந்நாட்டு குடிமகனாக இருக்கப் போகிறீர்கள்?

ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு அதிகமான புலம்பெயர்ந்தோரின் வருகையை நாம் தொடர்ந்து கொண்டிருந்தால், ஒருங்கிணைத்தல் என்ற மகத்தான பணியை நாம் ஒருபோதும் நிர்வகிக்க முடியாது. அது முடியாத காரியம்.

இதை பிரித்தானிய ஆட்சியாளர்கள் இன்னும் உணர வேண்டும். கடந்த டோரி அரசாங்கம் நிகர சட்ட இடப்பெயர்வுகளை ஒரு வருடத்திற்கு, ஒரு மில்லியனுக்கும் குறைவான நிலைக்கு உயர்த்த அனுமதித்தது மற்றும் சிறிய படகுகளில் சட்டவிரோதமாக கால்வாய் வழியாக வரும் புலம்பெயர்ந்தோரை தடுக்கத் தவறிவிட்டது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.