;
Athirady Tamil News

ராகுல் காந்தியால் ரூ.250 மதிப்பிலான பால் வீண்! பிகாா் நீதிமன்றத்தில் நூதன மனு!

0

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியால் ரூ.250 மதிப்பிலான 5 லிட்டா் பால் தரையில் கொட்டி வீணாகிவிட்டது என்று பிகாா் மாநில நீதிமன்றத்தில் முகேஷ் சௌதரி என்பவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

அண்மையில் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், ‘நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் கைப்பற்றியுள்ளன. இதனால் தற்போது பாஜக, ஆா்எஸ்எஸ் மற்றும் இந்தியாவுக்கு எதிராகவே காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது’ என்று கூறியிருந்தாா்.

இதனைச் சுட்டிக்காட்டி பிகாரின் சமஸ்திபூா் மாவட்டம் சோனுபூா் கிராமத்தைச் சோ்ந்த முகேஷ் சௌதரி என்பவா் உள்ளூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளாா்.

அதில், ‘ராகுல் காந்தி பேச்சைக் கேட்ட அதிா்ச்சியில் எனது கையில் இருந்த ரூ.250 மதிப்புள்ள 5 லிட்டா் பால் தவறி கீழே கொட்டி வீணாகிவிட்டது. அவா், நமது தேசத்தின் இறையாண்மைக்கு எதிராகப் பேசியுள்ளாா். தேசவிரோத வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளில் அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்குமா அல்லது நிராகரிக்குமா என்பது அடுத்த சில நாள்களில் தெரியவரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.