;
Athirady Tamil News

தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது தெரியுமா?

0

தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது என்பது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

முதலிடம்
அண்மையில் இந்திய தென்னை வளர்ச்சி வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “கடந்த 2016-ம் ஆண்டு முதல் கேரளா மாநிலம் தேங்காய் உற்பத்தியில் முதலிடத்தை பிடித்து வந்தது.

ஆனால், கடந்த 2022 முதல் 2023-ம் ஆண்டில் 563 கோடி தேங்காய்களை கேரளா உற்பத்தி செய்துள்ளது. இதே ஆண்டில், கர்நாடகா மாநிலம் 595 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்துள்ளது.

இதனடிப்படையில் கேரளாவை விட சுமார் 30 கோடி தேங்காய்களை அதிகமாக உற்பத்தி செய்து கர்நாடகா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2023-24-ம் ஆண்டு தற்காலிக மதிப்பீடுகளின்படி, கர்நாடகா 726 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது. இதில் இரண்டாவது இடத்தில் 578 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து தமிழ்நாடு உள்ளது.

இந்த பட்டியலில் கேரளா மாநிலம் 564 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து 3-வது இடத்தில் பின்தங்கியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.