இலங்கையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
ஜா-எல அருகே மோர்கன்வத்த கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (20) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றவாளி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.