;
Athirady Tamil News

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பெண்

0

வீடொன்றில் இருந்து 02 ரிவோல்வர்கள், தோட்டாக்கள் மற்றும் 02 வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (22) இரவு ஹபராதுவ பொலிஸ் பிரிவின் வெல்லேகேவத்த பகுதியில்கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய பெண் எனவும், அவர் வல்லேகேவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்படும் போது, ​​வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் , உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் , 02 பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் 02 வாள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.