சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 32 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் பகுதியில் ஐந்து நவீன மீன்பிடி படகுகளில் இருந்த குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
அதன்படி, கடந்த ஆண்டில் மாத்திரம் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 131 இந்திய மீனவர்களையும் 18 மீன்பிடி படகுகளையும் கடற்படை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.