;
Athirady Tamil News

பிரித்தானியாவில் வீட்டை விற்று, பிரான்சில் முழு கிராமத்தை வாங்கிய தம்பதி!

0

பிரித்தானியாவின் மேன்‌செஸ்டரில் இருந்த தங்கள் வீட்டை விற்று, பிரான்சில் ஒரு முழு கிராமத்தை வாங்கிய தம்பதி மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.

47 வயதாகும் லிஸ் மர்பி (Liz Murphy) மற்றும் 56 வயதாகும் அவரது கணவர் டேவிட், 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் பிரான்சின் தென் மேற்கில் உள்ள லாக் டி மெசான் (Lac De Maison) என்ற பழமையான கிராமத்தை வாங்கினர்.

400,000 பவுண்டுகளுக்கு மான்செஸ்டரில் தங்களுடைய மூன்று அறை கொண்ட வீட்டை விற்றுள்ளனர்.

அந்தப் பணத்தில் பிரான்சில் 400 ஆண்டுகள் பழமையான 6 வீடுகள், 2 பாரிய களஞ்சியகங்கள் மற்றும் 3 ஏக்கர் நிலம் ஆகியவற்றை வாங்கியுள்ளனர்.

இப்போது, அவர்கள் இந்த அமைதியான கிராமத்தை ஒரு வணிக மையமாக மாற்றி, மூன்று வீடுகளை விடுதி இல்லங்களாக உருவாக்கியுள்ளனர்.

இங்கு மொத்தம் 19 பேரை தங்க வைக்க முடியும். மேலும், சூரிய ஒளிச் சக்கரங்களை நிறுவி, சுற்றுச்சூழலை பாதிக்காமல் வாழ முயற்சிக்கின்றனர்.

வியாபாரம் மூலமாக குறைவான வருவாய் கிடைத்தாலும், காலணிப் போட்டியில் இருந்து விடுபட்டு, அதிக மனநிறைவு பெறும் வாழ்க்கை அவர்களுக்கு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.

“பிரான்சில் நாங்கள் கடன் இல்லாமல் வாழ்கிறோம். எனவே, வருவாய் குறைவாக இருந்தாலும் வாழ்க்கைத் தரம் அதிகமாக உள்ளது,” என்று லிஸ் கூறுகிறார்.


இருவரும் கோவிட் காலத்தில் இயற்கையான மற்றும் அமைதியான வாழ்க்கையை விரும்பியதால் இந்த முடிவை எடுத்ததாக கூறுகின்றனர்.

மேலும், பிரான்ஸ் செல்லும் செலவு குறைவாக இருப்பதால் இந்த இடத்தை தெரிவு செய்துள்ளனர்.

தற்போது, மூன்று விடுதி இல்லங்கள், 60 சூரிய ஒளிச் சக்கரங்கள், மூன்று ஆடுகள், நான்கு கோழிகள், மற்றும் மூன்று பூனைகள் ஆகியவற்றுடன் தங்கள் புதிய கிராம வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.