பதுளை – கொழும்பு ரயில் தடம்புரள்வு ; மலையக ரயில் சேவை பாதிப்பு!

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த 1008 ரயிலின் இயந்திரம் நாவலப்பிட்டி, பல்லேகம பகுதியில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு நேர அஞ்சல் ரயில் கம்பளையில் நிறுத்தப்பட்டு, பேருந்தில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தபால் ரயில் நாவலப்பிட்டியில் நிறுத்தி, பேருந்தில் கம்பளைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.