;
Athirady Tamil News

சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே! – பிரதமர் மோடி

0

புது தில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே என்று பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலும் சண்டை நீடித்தது. இதனால் கடந்த 4 நாள்களாக ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப்பில் அசாதாரண சூழல் நிலவியது. இந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதாக கடந்த சனிக்கிழமை(மே 10)மாலை 5 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் முதல்கட்டமாக இன்று(மே 12) பகல் பேச்சுவார்த்தை நடத்தினர். ஹாட்-லைன் தொலைபேசி வழியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 6 மணியளவில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் இன்றிரவு 8 மணிக்கு உரையாற்றினார். அவர் பேசியிருப்பதாவது: “ராணுவத்துக்குச் சல்யூட் அடித்து வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இந்தியாவின் தாக்குதலை தாங்க முடியாமல், பாகிஸ்தான் போரை நிறுத்த கெஞ்ச வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது தற்காலிகமான போர் நிறுத்தம்தான். நமது இந்திய ராணுவப் படை அவர்களை தொடர்ந்து உற்றுக் கவனித்து வருகிறது.” என்று கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.