;
Athirady Tamil News

நல்லூர் கந்தன் வளாகத்தில் அசைவ உணவகமா? பக்தர்கள் கவலை!

0

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்பாக இன்று (20) மாலை 4.30 மணிக்கு போராட்டம் நடைபெறவுள்ளது.

இன்று மாலை போராட்டம்
நல்லூரான் உற்சவ வளாகத்தில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து சைவ சமயிகள் அணிதிரண்டு எதிர்ப்பை பதிவு செய்யுமாறு அகில இலங்கை சைவ மகா சபை வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை நல்லூர் கந்தன் கோவில் அருகே அசைவ உணவகம்m திறக்கப்பட்டுள்ளமையானது நல்லூரான் பக்தர்களை கவலைகொள்ளச்செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.