;
Athirady Tamil News

இந்திய விமானப் படைக்காக ரூ.10,000 கோடியில் 3 உளவு விமானங்கள்

0

புதுடெல்லி: இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 உளவு விமானங்​களை கொள்​முதல் செய்ய முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. கடந்த ஏப்​ரல் 7 முதல் 10-ம் தேதி வரை இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே அதிதீ​விர போர் நடை​பெற்​றது. இந்த போரில் இந்​திய விமானப் படை​யின் ட்ரோன்​கள், உளவு விமானங்​கள் மிக முக்​கிய பங்கு வகித்​தன.

தற்​போது இந்​திய விமான படை​யில் பாம்​பார்​டியர் குளோபல் 5000, போயிங் 707-337சி, கல்ப்​ஸ்​டீரிம் ஜி100 ஆகிய உளவு விமானங்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. மேலும் இஸ்​ரேல் தயாரிப்​பான ஹெரோன் ட்ரோன்​கள் மற்​றும் இந்​திய விமானப் படை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்ட மிக் 25 ரக போர் விமானங்​களும் உளவு விமானங்​களாக பயன்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இவை தவிர பல்​வேறு ட்ரோன்​கள், ஹெலி​காப்​டர்​களும் எதிரி நாடு​களை வேவு பார்க்​கும் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு உள்​ளன.

இந்த சூழலில் இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 அதிவீன உளவு விமானங்​களை வாங்க முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. அமெரிக்​கா​வின் போயிங் நிறு​வனம் மற்​றும் கனடா​வின் பாம்​பார்​டியர் நிறு​வனத்​திடம் இருந்து உளவு விமானங்​கள் வாங்​கப்​படும் என்று தெரி​கிறது.

புதி​தாக வாங்​கப்​படும் 3 உளவு விமானங்​களில் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட அதிநவீன ரேடார்​கள், கண்​காணிப்பு கருவி​கள் பொருத்​தப்பட உள்​ளன. அமெரிக்​கா, பிரிட்​டன், இஸ்​ரேல் உள்​ளிட்ட நாடு​களிடம் மட்​டுமே அதிநவீன உளவு விமானங்​கள் உள்​ளன. இந்த பட்​டியலில் விரை​வில் இந்​தி​யா​வும் இணைய உள்​ளது.

.

இதுகுறித்து பாது​காப்​புத் துறை வட்​டாரங்​கள் கூறுகையில், ‘‘தரை, வான், கடல் பகு​தி​களை கண்​காணிக்​கும் வகை​யில் 3 உளவு விமானங்​களை வாங்க முடிவு செய்​யப்​பட்​டிருக்​கிறது. இவை மிக நீண்ட தொலைவு பறக்​கும் திறன் கொண்​ட​வை​யாக இருக்​கும். இரவு, பகல் மற்​றும் மோச​மான வானிலை​யிலும் இந்த உளவு விமானங்​களை இயக்க முடி​யும். இத்திட்​டத்​துக்கு ஐ-ஸ்​டார் என்று பெயரிடப்​பட்டு உள்​ளது’’ என்று தெரிவித்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.