;
Athirady Tamil News

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

0

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது.

உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற்று முன்தினம் (ஜூன் 11) வெடித்துள்ளது. அந்த எரிமலையின் வடக்கு துவாரத்தின் வழியாக வெளியேறிய எரிக்குழம்புகள் சுமார் 330 அடி உயரத்துக்கு சீறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், கடந்த 2024-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் 25வது முறையாக இந்த எரிமலை சீற்றம் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக அவ்வப்போது சீற்றம் பெற்று, அதிகப்படியான எரிக்குழம்புகளை வெளியேற்றும் இந்த எரிமலை அதற்குப் பின் சில நாள்களுக்கு சீற்றங்கள் எதுவுமின்றி காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கிலாயூயா எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் எனும் அபாயமுள்ளதால், அதனை ஆய்வாளர்கள் தொடர்ந்து கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.