;
Athirady Tamil News

வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் செயற்பாடு

0

வவுனியா மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் செயற்பாடு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் எஸ். ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இதுவரை வவுனியாவில் செயற்பட்ட முச்சக்கரவண்டிகளில் மீற்றர் இல்லாததனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இன்று முதல் மீற்றர் பொருத்துவதன் மூலம் நியாயமான கட்டண முறையைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய கட்டண திட்டத்தின் கீழ், முதல் கிலோமீற்றருக்கு 130 ரூபாவும் அடுத்து ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 100 ரூபா என்றவாறு கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.