;
Athirady Tamil News

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகள் மாயம்

0

பாகங்களிலிருந்து இணைக்கப்பட்ட ஜீப் தொடர்பான விசாரணை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளைக் கைது செய்ய களுத்துறையில் உள்ள நுககொட வீட்டிற்குச் சென்ற போதிலும், சந்தேக நபரும் அவரது கணவரும் வீட்டில் இல்லை என்று பாணந்துறை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேயின் மகன் ரசிக விதான, சந்தேகத்திற்கிடமான ஜீப்புடன் மதுகம நகரில் வைத்து பாணந்துறை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளிடமிருந்து அதை வாங்கியதாக தெரியவந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.