;
Athirady Tamil News

யாழில் இந்திய துணைத் தூதரக வாகனம் விபத்து; தொடரும் பொலிஸ் விசாரணை

0

யாழ்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (22) இரவு பத்து மணியளவில் யாழ். காவல் பிரிவிற்குட்பட்ட யாழ். பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,ன

யாழ்.நகர் பகுதியிலிருந்து திருநெல்வேலி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்.இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கந்தர்மடம் பகுதியில் இருந்து யாழ்.நகர பகுதிக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் யாழ்.இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனத்தில் பயணித்த அதிகாரிகளும், மேற்படி காரில் பயணித்த சாரதியும் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளர்.

இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் அவ்வீதி ஊடான போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின.

விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.