நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
காலை 08.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பமாகிய உற்சவம் தொடர்ந்து கொடியேற்றத்துடன் பிள்ளையார், முருகப்பெருமான், வள்ளி தெய்வானை மூஷிகம், மயில், அன்னம் என மூன்று தங்க வாகனங்களில் உள்வீதி உலா வந்தனர்.






