;
Athirady Tamil News

விசாரணைக்கு மறுத்து உள்ளாடையுடன் தரையில் படுத்துக்கொண்ட முன்னாள் அதிபர்

0

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் யேயோல், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து, தனது சிறை உடைகளைக் கழற்றிவிட்டு தரையில் படுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்றதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டு, விசாரணைகளை எதிர்கொண்டு வரும் யூன் சுக் யேயோலை, தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை செய்ய சிறப்பு வழக்கறிஞர்கள் முயன்றனர்.

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த யூன்
இதற்காக, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1, 2025) அன்று யூன் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்குச் சென்று, அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த யூன், தனது சிறை உடைகளைக் கழற்றிவிட்டு உள்ளாடைகளுடன் தரையில் படுத்துக்கொண்டார். அவரது இந்த நடவடிக்கையால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதைத் தவிர்த்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், ஒரு முன்னாள் அதிபரின் கண்ணியத்தைக் குலைப்பதாக உள்ளதாக யூனின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், இது ஒரு முன்னாள் அதிபரின் நடத்தைக்கு பொருத்தமானது அல்ல என நீதித்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். அதேவேளை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் யூன், இதற்கு முன்னரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.