;
Athirady Tamil News

கிளிநொச்சி கோர விபத்தில் பெண் படுகாயம்

0

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் ஏ 35 பிரதான வீதியின் ஊடாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த உந்துருளியும் அதே திசையில் இருந்து பயணித்த மற்றுமொரு பெண் செலுத்திய உந்துருளியும் மோதி விபத்துக்குள்ளானது.

வீதியை குறுக்கெடுத்து செல்ல முற்பட்ட வேலை ஏற்பட்ட வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

காயமடைந்த பெண் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உந்துருளியில் பயணித்த ஆண் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் விபத்து சம்பவம் தொடர்பாக தர்மபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.