;
Athirady Tamil News

இலங்கையிலுள்ள சீனர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

0

இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள், உள்ளூர் சட்டங்களைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அண்மைக்காலங்களில் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் சீன நாட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்தநிலையிலேயே, சீன தூதரகம் மேற்படி அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

இதன்படி, சீன நாட்டவர்களின் பிம்பத்தைப் பாதிக்காமல் இருப்பதற்கு, சீன சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் சீனத்தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.