;
Athirady Tamil News

பேச்சுவார்த்தை முடிவதற்குள் உக்ரைனை ட்ரோன்களால் புரட்டி எடுத்த ரஷ்யா

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அலாஸ்கா பேச்சுவார்த்தை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யா உக்ரைனில் 85 ட்ரோன்கள் மற்றும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு, ரஷ்யாவின் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான உக்ரைன் மீதான போரை நிறுத்துவதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் விமானப்படை, மாஸ்கோ “இஸ்கண்டர்-எம் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் 85 ஷாஹெட் வகை” ட்ரோன்களுடன் தாக்குதல் நடத்தியதாகவும், அதே நேரத்தில் நான்கு பிராந்தியங்களில் “முன்னணிப் பகுதிகளை” தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.