;
Athirady Tamil News

உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தம் ; டிரம்பின் மனைவி புதினுக்கு கடிதம்

0

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷிய ஜனாதிபதி புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில் போரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் பிரிவினால் வாடும் குழந்தைகளை காரணம் காட்டி உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தநிலையில் துருக்கி ஜனாதிபதி தாயீப் எரோடகனின் மனைவி எமினே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தம் ஏற்பட புதினுக்கு கடிதம் எழுதியிருந்ததை பாராட்டினார்.

தொடர்ந்து நீண்ட நாட்களாக நீடித்து வரும் காசா போரை உடனடியாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்ப வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.