;
Athirady Tamil News

யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது யானை தாக்குதல்

0

சிதுல்பவ்வ – கிரிந்த வீதியில் இன்று (21) காலை யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் மீது யானை ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த யானை தாக்குதலால் பேருந்து சேதமடைந்ததாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து ஏற்பட்டவுடன் ஓட்டுநர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பேருந்தை முன்னோக்கி செலுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் யானை பேருந்தைத் தாக்குவது, பேருந்திற்குள் இருந்த ஒருவரின் மொபைல் போன் கேமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.