தீவிரமடையும் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் திட்டமிட்டபடி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்க தலைவர் கோசல அபேசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அனைத்து தொழிற்சங்கங்களும் கூடி ஆராய்ந்ததன் பின்னர் இன்று (24) பிற்பகல் இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.