;
Athirady Tamil News

இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்: இருளில் மூழ்கிய உக்ரைன்

0

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பரவலான மின்தடை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா வான்வழித் தாக்குதல்
உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய வான்வழி ஏவுகணை தாக்குதலில் தலைநகர் கீவ் மற்றும் எட்டுக்கும் மேற்பட்ட நகரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 5,40,000 பொதுமக்கள் இந்த மின்தடை காரணமாக இருளில் மூழ்கியுள்ளனர்.

ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் சபோரிஜ்சியா பிராந்தியத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதுடன் 7 பேர் படுகாயமடைந்து இருப்பதாகவும், செர்காசி பிராந்தியத்தில் 10 பேர் காயமடைந்து இருப்பதாகவும் கீவ் மேயர் விட்டாலி கிளிட்சோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பாவி மக்களை இந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்க உறுதியான நடவடிக்கை வேண்டும் என்று சர்வதேச நட்பு நாடுகளுக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.