;
Athirady Tamil News

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

0

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பாலஸ்தீனர்களின் உடல்களை திங்கள்கிழமை(நவ. 3) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட 3 பிணைக்கைதிகள் உடல்களும் கடந்த 2023-இல் அப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்கள் மூவரது உடல்கள் என்று அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அக். 10-இல் காஸா போர்நிறுத்த ஒப்பந்தம் அமல் ஆன பின், ஹமாஸிடமிருந்து 20 பிணைக்கைதிகள் உடல்கள் இஸ்ரேலிடம் ஒபடைக்கப்பட்டுள்ளன. 8 உடல்கள் ஹமாஸிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும்போதும் இஸ்ரேல் தரப்பிடமிருந்து 15 பாலஸ்தீனர்கள் உடல்கள் விடுவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இதுவரை மொத்தம் 270 பாலஸ்தீனர்கள் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.