;
Athirady Tamil News

யாழில் இடம்பெற்ற கோரவிபத்து ; சம்பவ இடத்திலையே உயிரிந்த இளைஞன்

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகளுக்கு தடை
உயர்தரப் பரீட்சை இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகளுக்கு தடை

மேலதிக விசாரணை

தெல்லிப்பழை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் , மயிலிட்டியை சேர்ந்த வசந்த் (வயது 35) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் , மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் , வீதியில் விழுந்த வேளை வீதியில் வந்த கனரக வாகனம் இளைஞனுடன் மோதியதில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.