;
Athirady Tamil News

போர் பதற்றத்தைத் தூண்டும் சீனா ; வானில் வட்டமிட்ட போர் விமானங்களுக்கு தாய்வான் எச்சரிக்கை

0

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்து சென்றது. ஆனால், தாய்வான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

தாய்வான் பிரச்சினையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.

ஆனால் தனி நாடாக தங்களுக்கென தனி இறையாண்மை உள்ளது எனக்கூறி தாய்வான் அதனை மறுத்து வருகிறது.

இதற்கிடையே தாய்வான் எல்லையில் அவ்வப்போது போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தைத் தூண்டுகின்றது.

இந்நிலையில், 11 போர்க்கப்பல் மற்றும் 7 விமானங்கள் தாய்வான் எல்லையைச் சுற்றி வளைத்தன.

சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.