ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆரிய குளம் நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்று கலந்துரையாடினர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருந்தவநாதன் அனோசன் உள்ளிட்ட கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.