;
Athirady Tamil News

யாழில் விபத்தில் சிக்கியவருக்கு ஒரு வாரத்தின் பின் நடந்த துயரம் ; கதறும் உறவுகள்

0

யாழில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நாவலர் வீதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி பலி
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

இவர் கடந்த 18 ஆம் திகதி கஸ்தூரியார் வீதியால் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது வலது பக்கம் திரும்புவதற்காக மத்திய கோட்டை நோக்கி சென்றவேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.