;
Athirady Tamil News

வெப்பத்தால் உயிரிழக்கும் கோழிகள்! பண்ணையாளர்கள் கவலை

0

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகள் இறக்கின்றமை அதிகரித்துள்ளதாக கால்நடை பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை , இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச் குணசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நிலவும் வெப்பநிலையைத் தாங்க முடியாது இறைச்சிக் கோழிகள் இறக்கின்றன.

அத்துடன் கோழிகளால் இடப்படும் முட்டைகளின் எண்ணிக்கையும் தற்போது குறைந்துள்ளது. வெப்பநிலையைத் தாங்க முடியாததால் கோழிகள் முட்டையிடுவது சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது.

25,000 முதல் 30,000 விலங்குகள் வரை உள்ள கூண்டுகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிக்கப்படுவதாகவும், ஒரு மணி நேரம் மின்சாரம் தடைபட்டால், மின் பிறப்பாக்கிகள் உடனடியாக இயக்கப்பட வேண்டும்.

மின்சார பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு தேவையான அளவு டீசல் எரிபொருளை வழங்குமாறு விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.