கிளிநொச்சியில் வீதியில் யதார்த்தமாக சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பல்நகர் பகுதியில், சட்டவிரோதமான முறையில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(15.04.2026) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது
கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அம்பல்நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை சோதனையிட்டதில் அவரிடமிருந்து 03 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவரை இன்றைய தினம்(16.04.2026) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்