ஐரோப்பிய நாடொன்றில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: பலர் காயம்
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இரண்டு ரயில்கள் மோதல்
இன்று, டென்மார்க்கின் தலைநகரான Copenhagenக்கு வடக்கே அமைந்துள்ள Hillerod என்னுமிடத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
உள்ளூர் ரயில்கள் இரண்டு மோதிக்கொண்ட அந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
என்றாலும், ரயில்களில் பயணித்த அனைவரும் ரயில்களிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், யாரும் ரயில்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்கவில்லை என்றும் தீயணைப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.