;
Athirady Tamil News

காவி உடைக்குள் கள்ளத்தனம் ; 22 தேரர்களுக்கு தடுப்புக் காவல்; நீதிமன்றம் உத்தரவு

0

இலங்கைக்கு சட்டவிரோதமாக சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” மற்றும் “ஹேஷ்” வகை போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை , 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் பெருமளவிலான போதைப்பொருட்களைக் கடத்த முயன்றபோது, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் தேரர்கள் குழு கைது செய்யப்பட்டது.

காவி உடைக்குள் கள்ளத்தனம்
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு 110 கோடி ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 22 தேரர்களும் நேற்று ஞாயிற்றக்கிழமை (26) பிற்பகல் நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, இந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால், சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரினர்.

அதனை ஏற்றுக்கொண்ட மேலதிக நீதவான், சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இலங்கையில் அண்மைக்காலமாகப் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் இது ஒரு பாரிய மற்றும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாகக் கருதப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.