மகளை துண்டு துண்டாக வெட்டிய தந்தை: தகர பெட்டிக்குள் உடலை அடைத்து ரயிலில் வீசிய அவலம்
இந்தியாவில் மகளை துண்டு துண்டாக வெட்டி தந்தை ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளை துண்டு துண்டாக வெட்டிய தந்தை
கடந்த மே 17ம் திகதி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் உள்ள தகரப் பெட்டியில் சிறுமி ஒருவர் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், துண்டு துண்டாக வெட்டப்பட்டது ஷப்பா என்ற 15 வயது சிறுமி என்பதும், ஷப்பா மாற்று சமூகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அதனை கைவிட மறுத்ததால் அவரை அவரது தந்தையே ஆணவக்கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஷப்பா-வை அவரது சகோதரி நூர்ஜஹான் மற்றும் அவரது கணவர் முஜிபுல்லா ஆகியோரின் உதவியுடன் மே 16ம் திகதி கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பிறகு அந்த அடையாளத்தை மறைப்பதற்காக தலையை தனியாக வெட்டி குளத்தில் வீசியுள்ளார்.
மேலும் மற்ற உடல் பாகங்களை அடையாளம் காண முடியாத படி, தகர பெட்டியிலும், பையிலும் அடைத்து வீசியுள்ளார்.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது குஷி நகரில் ரயில் நிலையத்தில் தகரப் பெட்டியை 3 பேர் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சிற்குள் ஏற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுமியின் தந்தை அன்சாரி, சகோதரர் நூர்ஜஹான் மற்றும் மைத்துனர் முஜிபுல்லா ஆகியோரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.