;
Athirady Tamil News

நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும்-ஜனாதிபதி அனுர

0
video link-
 
 
நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அம்பாறையில் புதிய நகர சபைக்கான அடிக்கல் நாட்ட வருகை தந்த ஜனாதிபதி, அங்கு கூடியிருந்த மகா சங்கரத்ன மற்றும் பிற மதத் தலைவர்களை வாழ்த்தி, பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவால் நகர சபைக்காகத் தயாரிக்கப்பட்ட பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர், அவ்விடத்திற்கு வருகை தந்த விருந்தினர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன்பிறகு, சம்பிரதாயக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் தனது கருத்துக்களை தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, “இத்தகைய கட்டுமானங்கள் தொடங்கப்பட உள்ளன, ஆனால் அவை விரைவாக முடிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

“இன்று நமக்கு ரூபாயில் பிரச்சினை இல்லை, ஆனால் டாலர் பிரச்சினை உள்ளது” என்றும் ஜனாதிபதி கூறினார்.

திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ வும் இக்கூட்டத்தில் உரையாற்றினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.