;
Athirady Tamil News

இலங்கையில் மீண்டும் உயர்ந்த தங்க விலை ; நகை வாங்குவோருக்கு வெளியான அதிர்ச்சி

0

இலங்கையில் தங்க விலை இன்று (29) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி நேற்று (28) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 383,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 4000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 387,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் , 3600 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.