;
Athirady Tamil News

தனசாலையின் போது சுகாதார விதிமுறைகளை மீறிய வெதுப்பகத்திற்கு எதிராக நடவடிக்கை

0

களுத்துறை, கட்டுக்குருந்தவில் உள்ள ஒரு வெதுப்பக்கத்தில் தானசாலைக்கு விநியோகிப்பதற்காக தயாரிக்கப்பட்ட மாலு பாண், சீமெண்ட் தரையில் சுகாதாரமற்ற முறையில் கிடப்பதைக் கண்டறிந்த பொது சுகாதார ஆய்வாளர்கள், நேற்று (01) அவற்றை அழிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

களுத்துறைப் பகுதியில் உள்ள தானசாலைகள் மற்றும் அவற்றுக்கு உணவு தயாரிக்கப்படும் இடங்களை ஆய்வு செய்த வந்தபோது சுகாதார ஆய்வாளர்கள், கடந்த 31ஆம் திகதி அன்று அந்த வெதுப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு இந்த நிலைமையைக் கண்டறிந்தனர்.

கட்டுகுருந்தவில் அமைக்கப்பட்ட தர்ம இல்லத்திற்காக, இந்த வெதுப்பகத்தில் 2,500 மாலு பாண்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அங்கு தயாரிக்கப்பட்ட சில மாலு பாண்கள் பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள 550 மாலு பாண்கள் தரையில் கிடந்தன.

மேலும், அந்த வெதுப்பக ஊழியர்கள் மேலாடை அணியாமல் வேலை செய்வதையும் பொது சுகாதார ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இருப்பினும், சுகாதாரமற்ற முறையில் உணவைச் சேமித்து வைத்ததற்காக இந்த வெதுப்பகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் தெரிவிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.